Saturday, September 19, 2026

औवैयार के गीत

 वरिष्ठ हूँ, बेकार नहीं।

 कुछ लिखता हूँ, 

 आशा है वह व्यर्थ नहीं।

 

नालडियार तमिल जैन ग्रंथ।

मेरा ब्लॉग तमिल हिंदी संपर्क देखिए पूरा ग्रन्थ।


 பாடல்-101


 गायों  के दल  से भले ही  बछड़ा छूट  जाएँ,


वह बछड़ा  अपनी माँ  के पास पहुँचने में अति चतुर.


वैसे ही पूर्व-जन्म की विधि की विडम्बना ,


कर्ता तक पहुँचने में है ही  चतुर.


பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று


வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்


பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த


கிழவனை நாடிக் கொளற்கு


பல பசுக்களின் கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும் இளைய பசுங்கன்று தன் தாயைத் தேடி அடைதலில் வல்லதாகும். அது போல முற்பிறப்பிற் செய்த பழவினையும், அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை யுடையதாகும்.


பாடல் 102


खूबसूरती  ,जवानी,श्रेष्ठ संपत्ति,भय दिखानेवाले पद आदि हैं अस्थिर.


यह देख -समझकर  भी एक भी सद्कर्म न करें तो


 जन्म लेकर भी उसका जन्म 


अर्थहीन बेकार  ही अंत होनेवाला है.


உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்


ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி


ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு


நின்றுவீழ்ந் தக்க துடைத்து


அழகும், வாலிபமும், மேன்மையான பொருளும், பலர் அஞ்சத்தக்க மதிப்பும் ஓரிடத்தில் நிலைத்திராமையைப் பார்த்தும், யாதேனும் ஒரு வகையில் ஒரு நற்செயலும் செய்யாதவனுடைய வாழ்க்கை, உடலெடுத்துச் சில காலம் நின்று பயனில்லாது பின் அழிந்து போகும் தன்மையுடையது.


பாடல்-103


 कोई भी ऐसा नहीं,जो समृद्ध जीवन  न चाहता हो;


जैसे फलों का रूप -रंग -स्वाद  प्राकृतिक देन  है,


वैसे ही सुख-दुःख अपने-आप मिलनेवाला है,इसीलिए 


जो चाहते हैं सुख-संपत्ति ,उनको चाहिए सद्कर्म करना.


வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;


அளந்தன போகம் அவரவர் ஆற்றான்


விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்


காரெனச் செய்தாரும் இல்


செல்வம் முதலியவற்றால் வளமுடன் வாழ்தலை விரும்பாதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால் அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுடைய இன்ப நுகர்வுகள் (சுகபோகங்கள்) வரையறை செய்யப்பட்டுள்ளன. விளாங்காயை உருண்டை வடிவமாகச் செய்தவரும் இல்லை களாப்பழத்தைக் கருமையுடையதாகச் செய்தவரும் இல்லை! (விளாங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையாகத் திரண்டிருப்பது போலவும், களாப்பழம் ஒருவரால் கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும், அவரவர் இன்பமும் அவரவர் புண்ணிய இயற்கையால் அமைந்துள்ளது. ஆகவே இன்பம் விரும்புவோர் நல்வினையே செய்தல் வேண்டும்).


பாடல்-104


जो बुराई आती हैं ,उनको ऋषि-मुनि भी रोक नहीं सकते .वैसे ही 


आनेवाली भलाइयों को  कोई भी रोक नहीं  सकते.


वर्षा  न हुयी ,तो कोई भी बरसा नहीं सकते;


जोर की वर्षा हो तो कोई भी रोक नहीं  सकते.


உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,


பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி


வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்


சிறப்பின் தணிப்பாரும் இல்.


வந்து சேரும் தீமைகளை முனிவர்களாலும் தடுக்க முடியாது! அவ்வாறே பெறக் கூடிய நன்மைகளையும் யாராலும் தடுக்க முடியாது! மழை பெய்யாது ஒழிந்தால் அதனைப் பெய்விப்பாரும் இல்லை! அதிகமாகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் இல்லை!


பாடல்-105


ताड के पेड़ समान,जो सम्मान  के शिखर पर है ,


वे भी तिनके समान  सम्मान खो बैठेंगे.


इसके  कारण  पूर्व जन्म के बद्कर्म के फल ही है.


और कोई कारण है नहीं.


தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்


பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;


நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை


வினைப்பயன் அல்லால் பிற.


பனை அளவாக உயர்ந்த பெருமை மிக்கவரும் தினையளவாகச் சிறுத்துச் சிறுமையுற்று வருந்தி வாழ்வர்! இதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனேயன்றி வேறில்லை. (உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆவதற்குக் காரணம் முன் செய்வினையே).


பாடல்-106


 आप  जानते हैं ,कई चतुर होशियार अल्प आयु में मर जाते हैं,


अशिक्षित लोग दीर्घ  जीवन बिताते हैं,


इसका कारण सार हीन होना ही है,


रस  हीनों को यम जीने देते हैं.


பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்


கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்


சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்


கோதென்று கொள்ளாதாம் கூற்று.


பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.


பாடல்-107


अदम्ब  नामक लताओं को हंस तोड़ते हैं,


लहरों वाले सागर के किनारे पर रहनेवाले नृप!जान  लो.


बड़े महल में रहनेवाले , और उसके सामने खड़े होकर भीख माँगनेवाले ,


ये सब पूर्व जन्म के पाप -पुण्य  के फल ही है.


இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண


நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ


அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப


முன்னை வினையாய் விடும்.


அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலைகடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பெரிய வீடுகளின் தலைவாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல் எல்லாம் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே ஆகும். (வறுமைக்குக் காரணம் தீவினையே).


பாடல்-108


शहद और लम्बे समुद्रके किनारे पर शासन करनेवाले नृप!


जान-समझ  लो,


बुद्धिमान चतुर होशियार भी अपयश के कर्म करते हैं,


इसके कारण भी पूर्व-जन्म के कर्म-फल ही हैं.


அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்


பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி


நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!


செய்த வினையான் வரும்.


காற்று வீசி நெய்தல் நிலங்களிலே தேனைச் சிந்தும் நீண்ட கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! அறிவீனராக இன்றி அறிவுடையவராகத் திகழ்ந்தாலும் சிலர், பழியுடன் கூடிய செயல்களைச் செய்தல், முற்பிறப்பிற் செய்த தீவினையின் விளைவாகும். (நல்லறிவு கெடுதற்கும் காரணம் தீவினையே).


பாடல்-109


समुद्र से घेरे  अग जग में जीनेवाले सब,


ज़रा भी हानि  न चाहेंगे;


भला ही चाहेंगे; फिर भी 


पूर्व-जन्म के कर्म-फल  के अनुसार 


जो आना है,आजायेगा.


ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்


வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;


வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால


தீண்டா விடுதல் அரிது.


மிகுதியான நீரையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும் எல்லாரும் சிறிய தீமையையும் விரும்பமாட்டார்கள். நல்லதையே விரும்புவார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்வினைப் பயனால் வரத்தக்கவை வராமற் போவதில்லை.


பாடல்-110


गर्भ में उत्पन्न  विधि शिरोरेखा  कर्म फल  न होगा  कभी कम.


न बढेगा;न घटेगा; नियम न बदलेगा;


जो भोगना है ,वे उचित समय पर आ ही जाएगा;


फिर भी मनुष्य क्यों होता हैं दुखी अपने अंतिम समय पर;


சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா


உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்


சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்


இறுகாலத் தென்னை பரிவு.


கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் வினைகள் குறையமாட்டா வளரமாட்டா முறைமாறி வரமாட்டா துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்டா எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்?

No comments: