Sunday, September 13, 2020

 भारती   शिशु  (पापा) गीत.

பாடல்[தொகு]

महा कवि भारती  आजादी के पहले ही गा चुके ---गायेंगे,नाचेंगे, यों गाकर आनंदप्रद स्वतंत्र paa चुके हैं  हम.

उनका निम्न लिखित शिशु गान  प्रसिद्ध है.

हे बच्चो! दौड़,कूद, खेल,

तू कभी न बैठ सुस्त.

सब  से  मिलकर खेलो -

तू कभी  किसी अन्य बच्चों  को 

गाली मत दें.

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

   नन्हीं -नन्हीं  चिड़ियों जैसे ,

उड़ फिरकर घूम आ .

रंग-बिरंगे  पक्षी देख 

तू  मन में खुश हो जा.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ

திரிந்து பறந்துவா பாப்பா,

வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

चुगते -फिरते  वह मुर्गी ,-उनको भी मिलाकर खेल.

ठगकर धोखा देकर खानेवाला कौआ --

उसपर भी दया  दिखा .

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்

கூட்டி விளையாடு பாப்பா,

எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு

இரக்கப் படவேணும் பாப்பா.

गोरस देनेवाली गाय ,वह गाय  बहुत अच्छी है   बच्चो!

दुम हिलाकर आनेवाला कुत्ता ,

वह मनुष्य के साथी है बच्चो.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா;

வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

  गाडी  खींचनेवाले घोड़े,

खेत में जोतनेवाले बैल 

हम पर निर्भर  रहनेवाली बकरी,

in सबको बच्चो!पालन-पोषण कर.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு,

அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா.

बच्चो!सबेरे उठते ही  पढना ,

फिर मधुर गीत गाना, बच्चो!

शाम भर खेल ,बच्चो!

यो ही  कर अभ्यास. बच्चो!

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு - என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

बच्चों!कभी झूठ मत  बोल ,बच्चो!

बच्चों!दूसरों पर गुसल्खोर मत कर!

ईश्वर हमारे सहायक ,बच्चों!

कोई हानी नहीं होगी ,बच्चों!

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா,

தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா.

ठगियों  को देख . मत डर--बच्चों.

उनपर लात मारो,थूको,  बच्चों.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

दुःख के निकट  आने पर भी ,

हमें साहस हीन नहोना   चाहिए.

प्यार भरा  ईश्वर  हैं --

हमारे सारे विषाद सब दूर कर देंगे  बच्चो.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா,

அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

आलसी बहुत बुरा है, बच्चो!

  माँ की बात मानो,बच्चो!

रोनेवाले बच्चे है लंगड़े,

तू दृढ़ता  से सामना कर बच्चो!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்

சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,

தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ

திடங்கொண்டு போராடு பாப்பா.

तमिल देश में जन्में हैं  हम ,

वह हामारी माँ  मानो बच्चो!

यह देश  अमृत  से  अति मधुर!

यह हमारे ज्ञानी पूर्वजों का देश.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா,

அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

शब्दों में श्रेष्ठ हैं तमिल शब्द ,

उसे प्रणाम कर !बच्चों.

संपत्ति से भरा  हिन्दुस्तान  है,बच्चो!

रोज कर उसका यशोगान. बच्चो!

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்

தொழுது படித்திடடி பாப்பா;

செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

उत्तर में हिमगिरी,बच्चो!

दक्षिण में   कुमारी अंतरीप ,बच्चो!

पूरब -पश्चिम में सागर ,

इसका यशोगान कर  रोज़ ,बच्चो!

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா,

கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

वेद ज्ञान  भरा यह  देश,

वीरो से भरा यह देश,

भिन्न भेद नहीं है,यह देश.

इसे ईश्वर  मानकर  बच्चो!

रोज़  प्रार्थना कर बच्चो!

வேத முடையதிந்த நாடு, - நல்ல

வீரர் பிறந்த திந்த நாடு,

சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்

தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

बच्चों!  जाति-भेद नहीं, बच्चो!

उच्च कुल ,निम्न कुल  मत बोलो .

नीति,ऊँची  बुद्धि,शिक्षा-प्यार  आदि बड़े लोग 

भरे देश हमारा बच्चों.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்.

सभी जीव रासियों से प्यार  कर बच्चो!

ईश्वर सच्चा है मानो बच्चो!

वज्र ह्रदय चाहिए! यह जीने का ढंग  है बच्चो!

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;

வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது

வாழும் முறைமையடி பாப்பா.

No comments: