Saturday, April 25, 2015

விவேக் சூடாமணி

                                मनुष्य और स्वभाव गुण


आचार्य  श्री  शंकराचार्य  सहज स्वाभाविक गुण  के बारें में   अपने

"विवेक चूडामणि " ग्रन्थ में

विषय गुण  की निंदा करते हैं.

ஆதி சங்கராச்சாரியார்  சஹஜ  இயற்கை  குணங்களைப்பற்றி  தன்  "விவேக சூடாமணி " என்ற  நூலில்  விஷய குணங்களை நிந்திக்கிறார் .

 हर एक जीव के एक स्वाभाविक  गुण प्रेम और आसक्त होता है I

ஒவ்வொரு ஜீவனுக்கும் இயற்கை குணங்களின் மேல் அன்பும் பற்றும் ஏற்படுகிறது .

यह स्वाभाविक आकर्षण ही

उस जीव के अंत या धोखे के कारण बनते हैं.

இந்த இயற்கைக்  கவர்ச்சியே  அந்த ஜீவனுக்கு முடிவையோ அல்லது  ஏமாற்றத்திற்கு  காரணமாகிறது .

ये विषय वासना हैं -- இந்த  விஷய வாசனைகள்

नाद ,स्पर्श ,रूप ,रस ,गंध आदि  இசை ,தொடுணர்வு ,அழகு ,ருசி ,மணம் முதலியவை.

 विषयवासना  में एक   से   प्रेम होने पर उसका अंत निश्चय हैं I
இந்த விஷய வாசனையில் ஒன்றில் அன்பு இருந்தாலே முடிவு நிச்சயம் .

हिरन  नाद के प्रेम में फँस जाता  हैं तो  हाथी स्पर्श के   कारण ,

மான் இசையின் அன்பில்  சிக்குகிறது என்றால்  யானை தொடுஉணர்வால்

पतंग रूप आकर्षण के कारण , விட்டில் வழக்குப் பூச்சி  அழகின் கவர்ச்சி காரணமாக

मछली स्वाद रस के कारण , மீன் ருசியின்  காரணமாக

भ्रमर  सुगंध  के  कारण  -வண்டு மணத்தின்  காரணமாக

अपने -अपने प्राण तक त्याग देते हैं I  தன் -தன் உயிரை  விடுகின்றன.

 एक एक स्वाद  या विषय वासना वाले जंतु -पशु  को

अपने  जीवन - प्राण संकट  में   डालना पड़ता हैं  तो

मनुष्य की गति पर  विचार कीजिये  I

ஒவ்வொரு ருசி  அல்லது விஷயவாசனையால் ஜந்துக்கள்-மிருகங்கள் வாழ்க்கையை  உயிரை சங்கடத்தில்  விழுந்து விடுகின்றன  என்றால் மனிதனின் கதியை எண்ணிப்பாருங்கள்.

 उसको पाँचों विषय वासानायें आकर्षक   हैं I
அவனுக்கு ஐந்து விஷய வாசனைகளிலும்  கவர்ச்சி உள்ளது.

वे  विषय -वासना  के गुलाम  या बेगार भी हो जाते हैं I

அவர்கள் விஷயவாசனைகளின் அடிமை  அல்லது கொத்தடிமை  ஆகிவிடுகின்றனர்.

उसकी गति कैसी होगी ? அவன் நிலை எப்படி இருக்கும் ?

विषय वासना से बचिए I விஷய வாசனையில் இருந்து தப்புங்கள்.

एक शिकारी  बाजा बजाकर  उस  संगीत के मोह से हिरन को पकड़ लेता है.
ஒரு வேட்டைக்காரன் இசைக்கருவியின் இசையால் மானைப் பிடித்துவிடுகிறான்.

हथिनी  की खोज  में हाथी हड्डे  में गिर जाता है . பெண் யானையைத் தேடி ஆண் யானை  பள்ளத்தில் விழுந்து விடுகிறது.

पतंग  दीप के शिखर की रोशनी  में गिर जाते है
விளக்குப்பூச்சி விளக்கின் ஒளியில் விழுந்து விடுகிறது.

कीड़े खाने के मोह के कारण  तो

 मछली काँटे में फँस जाती है.
புழுவை சாப்பிடும் ஆசையால் மீன் தூண்டிலில் சிக்கிவிடுகிறது.

फूल के सुगंध अली  कली में कैद हो जाता है.
பூவின்  மணத்தில் வண்டு மொட்டில் கைதி ஆகிறது.

ये पाँचों जीवों को एक ही विषय वासना हैं .

இந்த ஐந்து ஜீவன்களுக்கும் ஒரு விஷய வாசனைதான்.

इक  वासना एक एक को संकट  में डाल देता है.
ஒரே வாசனை ஒவ்வொன்றையும் சங்கடத்தில் சிக்கவைக்கிறது.

मनुष्य  में ये पाँचों विषय वासनाएँ सम्मिश्रित हैं.
மனிதனிடத்தில் இந்த ஐந்து விஷய வாசனைகளும் கலந்துள்ளது.

वह नाद ,स्पर्श ,रूप ,रस ,गंध आदि पाँचों विषयों में मोहित हो जाता है.

அவன்  நாதம் ,தொடுஉணர்வு ,அழகு ,ருசி ,மணம் முதலிய ஐந்து விஷயங்களிலும்  மோகம்  கொள்கிறான் .

उसकी दशा -दुर्दशा कैसे  रहेगी ?
அவன் நிலை -துர்நிலை  எப்படி இருக்கும் ?

देखिये  -मूल  श्लोक :--

शंदादिभिः पञ्चभिरेव  पञ्च

पंचात्व्मापु: स्वगुणैन  बद्धाः I

कुरंग्मातान्ग्पतन्ग्मीन -

Friday, April 17, 2015

   வையகம்  -இதில் ஆண்டவன் ஒரு புரியாத  புதிர்.

संसार --जग  में भगवान एक अज्ञात   हैं जब तक मनुष्य की इच्छाएँ पूरी होती हैं .

மனிதன்  விருப்பங்கள் நிறைவேறும் வரை.

ஆனால், மனித முயற்சிகள்  தோல்விகாணும் போது

 लेकिन ,मनुष्य जब अपने प्रयत्न में  हार  जाता  है,उसका मन शिथिल हो जाता  है, तब  उसको एक आशा, 
एक  लगाव , एक प्रेरणा और एक प्रोत्साहन  की ज़रुरत हैं.

அவன்  மனம் தளரும் போது ,

அவனுக்கு ஒரு நம்பிக்கை ,ஒரு பிடிப்பு , ஒரு முயற்சி ,

ஊக்கம்  தேவை.

அது எப்படி கிடைக்கும்?  ==वह कैसे मिलेंगे .?

இவை கிட்டாத போது ஒரு நொடியில் தற்கொலை /கொலை .

இது மனிதனுக்கு  ஏற்ற வழியா /??

जब ये  नहीं मिलते तब एक पल में आत्महत्या /हत्या  को अपनाता हैं .क्या यह  मनुष्य के लिए उचित हैं ?

அப்பொழுது  அவனுக்கு ஊக்கம் அளிப்பது  ஆன்மிகம்.


तब उसको प्रोसाहित करनेवाला  आध्यात्मिकता   है .

உலகம் ,நாம் என்று நினைக்கும்  மனிதன்

எவ்வித  தோல்வியும்  சந்திக்க முடியாமல்  தன்னையே

அழித்துக்  கொள்ள  லௌகீகம்  தூண்டும்.

संसार ही हम यों जो सोचता है ,उसको कोई हार सह नहीं सकता,लौकिकता उसको खुदकुशी की प्रेरणा देगा.

ஆன்மிகம்  உன் க்ரஹநிலை  சரியில்லை .

இறைவனை வழிபடு  என்று ஆற்றுப்படுத்தும்.

आध्यात्मिकता  यह कहकर दिलासा देगी कि  तेरी ग्रह-दशा सही नहीं है; ईश्वर  की प्रार्थना करो.

நாற்பத்தைந்து  நாள்  இந்த மந்திரம் சொல்.

पैतालीस दिन यह मन्त्र कहो;

இந்த கோவிலுக்குப்போ .

यह मंदिर  जाओ;

அவனுக்கு  வாழ  நம்பிக்கை  அளிக்கும்.

उसको  जीने की आशा होगी.

தம்மினும் மெலியாரை நோக்கி ,அம்மா!

यह एक  दर्शन हैं --अपने  से पीड़ित  लोगों  को देखकर  -यों खुश होना चाहिए.   कि  हम बड़े हैं.

பெரிதென்று அக மகிழ்க --இது ஒரு தத்துவம்.

புத்தர்  பிறப்பு ,மூப்பு .இறப்பு   மூன்றிலும் வையகம் படும்

துன்பம்  கண்டார்.துறவியானார் .

बुद्ध  ने देखा --जन्म -मरण -मृत्यु  . सन्यासी बने.

அவருக்கு  கிடைத்த ஞானம் --அன்பு ,சேவை ,புன்சிரிப்பு .புலனடக்கம்.அஹிம்சை .

उनको  जो ज्ञान मिला --वह  है -प्यार ,सेवा,मुस्कुराहट,संयम  .अहिंसा.

இதையே  ஆன்மிகம் --

इसीको  आध्यात्मिकता --काम ,क्रोध ,मद ,लोभ  कहती  है.

காமம் ,குரோதம் ,ஆணவம் பேராசை ,
இதையே வள்ளுவர் அறம் பற்றி கூறும்  போது-

वल्लुवर धर्म के बारे में  कहते समय - 

ईर्ष्या ,इच्छा ,क्रोध दुःख भरे शब्द   तजना ही धर्म  है.

அழுக்காறு ,அவா,வெகுளி ,இன்னா சொல் இவை  நான்கும் மிழுக்கா இயன்றது அறம்  என்கிறார்.

काम ,क्रोध ,मोह आदि  नाम बिगाड़ने  का रोग  है.


காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய்.  என்கிறார்.

इसीलिये   इन  दुश्चरित्रों  को छोड़कर  ईश्वर की  प्रार्थना करके सुखी 


पाएँगे.

எனவே  இவை விடுத்து இறைவனைதுதித்து 

இன்புற்று   வாழ்வோம்.

Wednesday, April 15, 2015

प्यार /அன்பு

                                                        प्यार 

प्यार क्या दिखा  सकते  हैं ?-------அன்பை  காட்ட முடியுமா?

ईश्वर के समान  आत्मानुभव  ही प्यार है. கடவுளைப்போன்று ஆத்மானுபவம்  தான்  அன்பு.

कई लोगों की धारणा  है  -- 

जो  प्यार करता  है ,उसको कुछ देना है.அன்பு செய்பவனுக்கு எதோ  ஒன்றை கொடுப்பதே அன்பு என்பது பலரின் எண்ணம்.

कुछ  पाना हैं. ஏதோ  ஒன்றைப்பெரவேண்டும்.

शादी का  प्यार शारीरिक सम्बन्ध हैं;  திருமண அன்பு உடல் சம்பந்தப்பட்டது.

शादी  का प्यार संतानोत्पत्ति  तक  है.-திருமண அன்பு குழந்தை பிறப்பிப்பது வரை.


नन्हा मेहमान  एक हिंदी उर्दू शायरी हैं ;  சிறிய விருந்தாளி ஒரு ஹிந்தி உருது  கவிதை.

संतान के होते ही पति के  प्यार   को अनदेखा करना ,
अपना पूरा समय अपने शिशु पर केन्द्रित रखना 
नन्हे मेहमान  के आगमन से स्वाभाविक  हो जाता है.

குழந்தை பிறந்ததுமே கணவனின் அன்பை கவனிக்காமல் இருப்பது,.தன்னுடைய முழு நேரத்தையும்  தன் குழந்தையை மையப்படுத்துவது 
புதிய விருந்தாளி வருவதால்  இயற்கை ஆகிறது.
तब से पति  का ध्यान भी अपने बेटे की तुतली बोली कुतूहल  में 
लग जाता है. यह प्यार सहज ,त्याग भरा, आनंद भरा संतोष भरा हो जाते हैं. அப்பொழுதிலிருந்து கணவனின் கவனமும் தன மகனின் மழலை பேச்சு  மகிழ்ச்சியில் ஈடுபடுகிறது.
இந்த  அன்பு இயற்கை யாக தியாகம் நிறைந்த ஆனந்தமும் உள நிறைவிலும் நிறைந்து விடுகிறது.

शाराबी  मित्रता और प्यार पीने -पिलाने  की सीमा पर सीमित है.
குடிகார  நட்பும்  அன்பும் குடிப்ப திலும்  குடிக்கவைப்பதிலும் வரையறுக்கப்படுகிறது.

दोनों  की आत्मीयता  शराब खाने में देखना है , இருவரின் ஆத்மீயமும் சாரயக்கடை வரைதான்.

उनका प्यार निरुद्देश्य केवल नशा चढाने तक हैं.
அவர்களுடைய அன்பு எவ்வித நோக்கமும்  இன்றி போதை ஏறுவது வரைதான்.
गरीब  और मध्यवर्ग  शराब पीने के लिए ही मेहनत करते हैं.
ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் குடிப்பதற்காகவே உழைக்கின்றனர்.
प्रेमचंदजी का कफन अनपढ़ गंवार पियक्कड़ों की निर्दयता दर्शाता हैं.
பிரேம்சந்த் அவர்களின்  கபன் (கோடி சவத்திற்கு போடுவது )படிக்காத  கிராமீய குடிகாரர்களின் இரக்கமற்ற தன்மையைக் காட்டுகிறது.

शराबी को केवल मधुशाला प्यारा है. குடிகாரனுக்கு  சாரயக்கடை மட்டுமே அன்பாக உள்ளது.
जब पीने का वक्त आ  जाता हैं ,तब उनका ध्यान ,
अपनी पत्नी ,अपने बच्चों.अपने पद ,अपनी इज्ज़त किसी पर नहीं होता.

குடிக்கின்ற நேரம் வந்தால் அவன் கவனம் தன் மனைவி தன குழந்தைகள் ,தன பதவி ,மரியாதை போன்றவற்றில்  இருக்காது.
बड़े -बड़े अधिकारी ,मंत्री ,धनी  सब कुछ भूलने पीते हैं.
பெரிய அதிகாரிகள் ,அமைச்சர் .பணக்காரர்கள் எல்லோருமே  தன்னை மறக்க குடிக்கின்றனர்.
बुद्धिभ्रष्ट  करना शराबी प्यार. அறிவிழப்பது குடிகாரனுக்கு அன்பானது.

  देश प्रेम समाज सेवा के प्रेम विचित्र हैं;
நாட்டுப்பற்றும் சமுதாயப் பணியும் அன்பு வியப்பானது.

इसके लिए  धन  प्रधानता है  आजकल.
இதற்கு இந்நாட்களில்  பணம் முக்கியமாகிறது.

एक  ज़माना था ,देश-प्रेमी  पर शंका नहीं होता;
ஒருகாலத்தில் நாட்டு அன்பு உள்ளவர்கள் மீது சந்தேகம் வராது.

समाज सेवक और देश -प्रेमी  देव तुल्य  माने जाते थे;
சமுதாய தொண்டர்களும் நாட்டுப்பற்று கொண்டோரும் தெய்வத்துக்கு ஒப்பிடுவர்.

आजादी के बाद जो नेता आये ,उनमें धन जोड़ने की इच्छा  बढ़ गयी.
சுதந்திரத்திற்குப் பிறகு வந்த தலைவர்களுக்கு பணம் சேர்க்கும் ஆசை அதிகரிக்கவிட்டது.

केवल  नेता ही नहीं ,आम जनता भी रिश्वत देना और अपने कार्य 

संभालना  दोनों क गलत नहीं  मानती .बुरी कमाई को पाप कहनेवाले कम 

हो गए.

தலைவர்கள்  மட்டுமல்ல ,பொதுமக்களும் லஞ்சம் கொடுப்பது ,தன காரியத்தை  நடத்துவது ,இரண்டையும் தவறாக ஏற்கவில்லை. தீய சம்பாத்தியத்தை  பாவம் என்று சொல்வது குறைந்துவிட்டது.

கடவுள் பற்றிலும் புதிய கோவில் திறப்பது ,பழைய கோவிலில் கவனம் செலுத்தாமையே பக்தி ஆகிவிட்டது.
பழைய கோவில் உடைப்பது ,மராமத்து செய்வதும் அதில்கஜானா உள்ளதா ,பாதாள அரை உள்ளதா என்று பார்ப்பதற்கே.

புதிய கோவில் ஒரு குழுமம்.வணிக மையம்.அவைகளில் வைரம் ,தங்கம் வெள்ளியின் 
சிலைகள்,பிரசாதம் ,நைவேத்தியங்கள் ,கடைகள்,ஹோட்டல் ,தாங்கும் விடுதி போன்றவசதிகள். இந்நாட்களில் வெளி ஆடம்பரத்தையே பக்தி ஆக கருதுகின்றனர்.

ஆகையால் பணத்திற்கே அதிக மதிப்பு.

ஆதர்ஷமான அதாவது எடுத்துக்காட்டிற்கான அன்பு 

தியாகம்  நிறைந்தது.மன ஆழத்துடன் தொடர்பு கொண்டது.ஆழ்ந்த அன்பு தெய்வீகமானது.



  ईश्वर प्रेम-आजकल  नए मंदिर खोलना और पुराने मंदिर पर ध्यान न 

देना भक्ति हैं. पुराने मंदिर तोड़ने में इसीलिये लगते हैं ,मरम्मत करने 

इसीलिये लगते हैं ,किसलिए ?क्या उनमें कोई खजाना .तहखाना हैं?

    नए मंदिर एक कंपनी हैं ; व्यापारिक केंद्र हैं.उनमे हीरे .चाँदी ,सोने की 

 मूर्ति ,प्रसाद ,नैवेद्य ,दुकानें ,होटल ,लाडज सभी सुविधाएँ  हैं.  

 आज कल  बाह्याडम्बर को ही  प्यार मान रहे हैं ; इसीलिये  प्यार में धन का ही महत्त्व हैं.
आदर्श प्रेम तो त्याग से भरा है,मन की गहराई पर सम्बंधित है.गहरे प्रेम 
ईश्वरीय  होते  हैं.

प्रेम  तो व्यापक और संकीर्ण ; प्रेमी -प्रेमिका का  प्रेम


 तंग गली के समान ; तीसरे को स्थान  नहीं  है; देश -

प्रेम समाज प्रेम -भाषा प्रेम  ,आध्यात्मिक प्रेम 

 व्यापक.  रवि रमेश जी धन्यवाद  आप के विचार के 


लिए.

प्रेम का मापदंड व्यक्ति के मनो भाव पर  निर्भर है.


அன்பு குறுகியது /பரந்த தன்மை உள்ளது.காதலன் -காதலி அன்பு குறுகிய  சந்து போன்றது.மூன்றாம் மனிதனுக்கு இடமளிக்காது. நாட்டுப்பற்று ,சமுதாயப்பற்று ,ஆண்மீகப்பற்று பரந்த மனப்பான்மை கொண்டது.

அன்பின் அளவுகோல் மனிதனின் மனநிலை சார்ந்தது.


Sunday, April 12, 2015

Anandakrishnan 





Sethuraman விநாயகரைகடலில்வீசிகா


ல் வேறு.கைவேறுதலைவேறாகா 



சிதைக்கும்அவமானம்செய்வோர் 


இந்துக்கள்..


भगवान  विनायक को समुद्र में फेंककर   पैर ,हाथ  सर


   अलग करके अपमानित करनेवाले  हैं  हिन्दू लोग.

****************************************************

      







न तो भावी पीढी पछताएगी ; இல்லையெனில் எதிர்காலத்தலை முறை வருத்தப்படும்.

हमारा अपना भारत  कब रहा ?--நம் பாரதம் எப்பொழுது இருந்தது ?!!!


अति प्राचीन ; अत्यंत प्राचीन.---மிகப் பழமை -மிகமிகப்  பழமையானது.

इतिहास के पूर्व.  --வரலாற்றுக்கு முன்னால்


ईसा के पूर्व --ஏசுவுக்கு முன்னாள். 

रामायण काल के पूर्व -ராமாயணத்திற்கு  முன்னாள்.

वेद काल से .-வேத காலத்தில் இருந்து .

प्रमाण ---आध्यात्मिक क्षेत्र . --சான்று ஆன்மிகம் .

कैलास-मानसरोवर -रामेश्वर. --கைலாசம் --மானசரோவர் -ராமேஸ்வரம்.

शिव -पार्वती -विघ्नेश -कार्तिक.--சிவன் --பார்வதி -விக்னேஷ் -கார்த்திக் 

अगस्त्य मुनि --वेद -पुराण -ऐतिहासिक पुराण. அகஸ்தியர் -வேதம் -புராணம் -இதிகாசங்கள் 
सनातन धर्म -जैन -बुद्ध धर्म.-சனாதன தர்மம் -ஜெயின் -புத்த -தர்மங்கள் 

बाकी धर्म कब  आये?!! மீதி தர்மங்கள்  எப்பொழுது வந்தன ?!!
 .  
जो आये चले गए;  -வந்தவர்கள் சென்றுவிட்டனர்.

जो बचे -बसे--மீத உள்ளவர்கள்  குடியுள்ளனர் 

वे तो भारतीय धर्मावलम्बी.--அவர்கள் பாரதீய மதத்தவர்கள் 

न मुसलमान भारत के ,न ईसाई भरत के.- முஸ்லிம்  இந்தியர்கள் கிடையாது .

கிறிஸ்தவர்கள்  இந்தியர்கள் கிடையாது.

जो हैं उनके पूर्वज तो सनातन हिन्दू धर्मावलम्बी .  இருப்பவர்களின் முன்னோர்கள் சனாதன  ஹிந்து  மதத்தைச் சார்ந்தவர்கள்.

न  स्थान है अन्य धर्मों का.-மற்ற மதங்களுக்கு இடமில்லை.

मुसलमान तो अपने धर्म का देश बंटवारा कर चुके हैं.

முஸ்லிம்கள் தன் மதத்திற்கான நாட்டை பிரித்துச் சென்றுவிட்டனர்.

वे ही लूटने आये ; खूब लूटे. அவர்கள் கொள்ளை அடிக்கவந்தனர், நன்கு கொள்ளை அடித்தனர்.
फिर टुकड़े क्र्केचले गए.-பிறகு நாட்டைத்  துண்டாக்கி சென்றுவிட்டனர்.

हम तो अतिथि देवो भाव - நாம் விருந்தினரை தெய்வம் என்கிறோம்.

वसुदैव कुटुम्बकम मानते -पालन करते आये हैं. 
வையகம்  ஒரு குடும்பம் என்று ஏற்று கடைப்பிடித்து வருகிறோம்.


पर विष वृक्ष -जंतु को समूल नष्ट न करके 
पालने का नतीज़ा.
ஆனால் விஷ விருக்ஷம் --ஜந்துக்கள் வளர்ப்பதின் பலன் 

जो पिटारी ठहरने आये ,वे निजी लोगों को भगाने तुले हैं  

ஒண்டவந்த பிடரி ஊர்ப்பிடாரியை விரட்ட ஈடுபட்டுள்ளனர்.

तो  सहना अपने को आप नाश करना  सिवा और कुछ नहीं.

இதை சகித்தல் நம்மையே அழித்துக் கொள்வது போல,
सोचो!भारतीय !जागो! कुछ करो !
இந்தியரே !எழுங்கள்! சிந்தியுங்கள்! ஏதாவது செய்யுங்கள்!

न तो भावी पीढी पछताएगी ; இல்லையெனில் எதிர்காலத்தலை  முறை வருத்தப்படும். 

थूकेगी तुम पर. உங்கள் மேல் காரி உமிழும்.

Sunday, April 5, 2015

நேர்மையுடன் செய்வதே.

அன்பு  அதிகம்,

அஹம்பாவம் இல்லாமை ,

அகிலத்தில் இருந்தாலும்  ,

பற்றற்ற  தன்மை ,

பரோபகாரம் ,

 தானும்  வாழ்ந்து ,

மற்றவர்களையும்   வாழ வைப்பதும் ,

தானமும்  தர்மமும் செய்வதும் 

ஆன்மிகம்.

ஆனால் , இன்றைய ஆன்மிகம் 

ஆடம்பரம் நிறைந்ததாகவும் ,

பரிகாரம் ,ஹோமம் யாகம் ,

காணிக்கை ,கனகம் ,வெள்ளியில் 

பாவங்கள் போகும் என்றும் 

வணிக நோக்கில் சென்றுகொண்டிருக்கிறது.

இன்றைய  ஆடம்பர பக்தி,

குறுக்குவழி தரிசனம் ,கட்டண  தரிசனம் 

முக்கியஸ்தர் முன்னுரிமை என்பது 

நமது ஆலயங்களில்  தொன்று தொட்டு வருவது.

வேறுபாடுகள் ,வேற்றுமைகள், விருப்பு 

,வெறுப்புகள்  இருந்தாலும்  ,

ஆலயங்களில்  பக்தர்கள் கூட்டம் ஈர்ப்பது 

ஆண்டவனின்   அற்புதம்.

ஆலயங்கள் சென்றால் ஆத்ம திருப்தி.

ஆத்மா நம்பிக்கை .ஆத்மானந்தம்.

ஆனால், இன்றைய பக்தியில் 

ஒரு சுற்றுலா வேகமே காணப்படுகிறது.

ஆழ்ந்து அமர்ந்து ப்ரார்த்தனை குறைத்து வருகிறது.

காரணம்  வேலைப்பளு .
அருள் /பொருள் இரண்டுமே

 அத்தியாவசியமாக 

உணரும் காலம்.

அனைவருக்கும் முன்னேறும் வாய்ப்பு.

அனைவருக்கும்   கல்வி.

அனைத்து மக்களும் சுகம் /இன்பம் பெறவேண்டும் 

சர்வே ஜனா சுகிநோபவந்து --அந்த ஜபம் 

பலனளிக்க தொடங்கும் யுகம்.
இதில் மிகவும் அருள் பெற தேவை 

துன்ப மின்றி இன்புற்று வாழ ,

நேர்மை ,சத்தியம் ,கடமை ,கண்ணியம்,
புலனடக்கம்.
இவ்வழியில் ஆண்டவன் அருள் பெற 

அவன் இட்ட பணியினை ஆழ்மனதுடன் 

நேர்மையுடன் செய்வதே.













Saturday, April 4, 2015

आध्यात्मिकता की आवश्यकता नहीं जग में.--ஆன்மிகம் வேண்டியதில்லை பாரினில்.

பாரினில்  பகவான்  படைப்பில்  ,--जग  में ईश्वर  की  सृष्टि  में

 பல அதிசயங்கள்.--------------कई बातें हैं अद्भुत.

பரவசங்கள். परवश.

பக்தி  என்பது  மனிதனின்  கடும் முயற்சி        भक्ति तब तीव्र होती हैं ,जब मनुष्य  अपने कठोर

  பலன் அளிக்காமல்  போனால் தீவிரமாகிறது. कठोर प्रयत्न में हार जाता है.

ஒரு கப்பல் மூழ்கும்  போது அனைவரும் மூழ்கி जब एक जहाज डूबता हैं तब सब के सब मर जाते हैं.

முக்தி அடைகின்றனர்.

ஒரு விமான விபத்தில் அனைவரும் மரணம். एक हवाई दुर्घटना में सब के सब  मर जाते हैं.

ஒரு ஹிந்து தப்பிக்க முடியாது. एक  हिन्दू बच नहीं सकता .

ஒரு இஸ்லாமியன்  தப்பிக்க முடியாது .एक  मुसलमान  बच नहीं  सकता.

ஒரு கிறிஸ்தவன் தப்பிக்க முடியாது. एक ईसाई बच नहीं  सकता.

இயற்கை சீற்றம் ,பஞ்சம்  என்றால் அனைவருக்கும் பாதிப்பு.

प्राकृतिक  नाराज अकाल  का प्रभाव सब पर पड़ता है.

பாலைவன மணல்  அனைவரையும் சுடும்.

मरुभूमि  का रेत सब को गरम लगता है.

அல்லா என்றால் ,சிவா   என்றால் ,ஏசு என்றால் சுடும் மணல்

குளிர் சாதனம் ஆகுமா? क्या अल्ला ,शिव ,ईसा  कहने से वह ठण्ड  हो जाएगा?

இயற்கை    அனைவருக்கும் பொது . प्रकृति   सार्वजनिक हैं,

இறைவன்  படைப்பது. भगवान  की सृष्टि

சூரிய ஒளி,சந்திரன் ஒளி,அமாவாசை இருட்டு  பொது.
सूर्य ,चन्द्र का प्रकाश ,अमावाश्य का  अन्धकार  सार्वजनिक  हैं.

மனிதர்களை ஒற்றுமைப் படுத்தவே  மதங்கள்.
मनुष्यों  की एकता के लिए ही धर्म हैं.

மனிதர்களை  வேறுபடுத்துவது  மனித அறிவு.
मनुष्यों को अलग करना मनुष्य की बुद्धी हैं.

மனிதர்களை  ஒற்றுமைப் படுத்துவது ஆன்மிகம்.

मनुष्य  को एकता  करना आध्यात्मिकता हैं.

ஒற்றுமை இல்லா ஆன்மிகம் ,மனிதநேயம் வளர்க்கா ஆன்மிகம்,

बिना एकता की आध्यात्मिकता .मनुष्य की ममता  न  बढानेवाला आध्यात्मिकता , मनुष्यों को अलग -अलग करनेवाली आध्यात्मिकता  की ज़रुरत नहीं जग में.

மனிதர்களை  வேறு படுத்தும்  ஆன்மிகம் வேண்டியதில்லை

பாரினில்.


Friday, April 3, 2015

விருந்தோம்பல் अतिथि सत्कार

Showing posts with label குறள் 81-90Show all posts

22
jan

விருந்தோம்பல்


अतिथि सत्कार 

१.आदर्श गृहस्थ  जीवन  में  धन जोड़ने का मतलब  हैं ,उद्देश्य है 

अतिथि सत्कार  करना.

२.अतिथि के घर में रहते ,खुद खाना ,अतिथि को न खिलाना 

भले ही वह अमृत  हो ,वह तो उचित संस्कृति  नहीं है.


3.अतिथियों  को रोज़ स्वागत  करके ,सत्कार करनेवाले गृहस्थ 


 को  कभी  दुखी  या दरिद्र  का सामना नहीं  करना  पडेगा.


4.मन से ,अति खुशी  से अतिथियों  का सत्कार करनवाले  के 


घर  में लक्ष्मी देवी सदा के लिए बस जायेगी.

5.अतिथियों  का सत्कार करके ,पहले उनको खिलाकर ,बाकी 


बचे-कुचे  खाना  खुद खानेवाले  के खेत में बीज बोना है क्या?

खुद अनाज  का  भण्डार उत्पन्न  होगा.





६. जो आये अतिथियों का खूब सत्कार करके ,आनेवाले अतिथि  

की प्रतीक्षा में  प्रतीक्षा  में रहेगा, वह देवलोक में प्रिय पात्र 

बनेगा.उसका नाम  अमर  रहेगा.

७.अतिथि सत्कार  के यज्ञ का फल ,असीम हैं  और अतिथि की 

योग्यता  पर निर्भर  है.

८.अतिथि -सत्कार  यज्ञ  में  खर्च  न  करके धन जमा  करके 


 रखनेवाले  का  अंतिम  जीवन  एकांत में दुख-मय  रहेगा.

९. अतिथि सत्कार न  करनेवाला  धनी ,भले ही अमीर हो ,पर   

दरिद्र ही रहेगा.


१०. अनिच्च नामक एक फूल हैं ,उसको सूंघते  ही सूख जाएगा ,

वैसे ही अतिथि भी मेजबान  के  अनादर व्यवहार या दृष्टि 

 देखकर  दुखी होगा.



குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.

குறள் வரிசை:  81  82  83  84  85  86  87  88  89  90

குறள் 81: 
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.
கலைஞர் உரை: 
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
மு.வ உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடைநின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின்பின் வைக்கப்பட்டது.)

இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.).
மணக்குடவர் உரை:
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
Translation: 
All household cares and course of daily life have this in view. 
Guests to receive with courtesy, and kindly acts to do.
Explanation: 
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
குறள் 82: 
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
கலைஞர் உரை: 
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
மு.வ உரை:
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.
பரிமேலழகர் உரை:
சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.
Translation: 
Though food of immortality should crown the board, 
Feasting alone, the guests without unfed, is thing abhorred.
Explanation: 
It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.
குறள் 83: 
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.
கலைஞர் உரை: 
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
மு.வ உரை:
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
பரிமேலழகர் உரை:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.).
மணக்குடவர் உரை:
நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
Translation: 
Each day he tends the coming guest with kindly care; 
Painless, unfailing plenty shall his household share.
Explanation: 
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.
குறள் 84: 
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.
கலைஞர் உரை: 
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
மு.வ உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
பரிமேலழகர் உரை:
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.).
மணக்குடவர் உரை:
திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.
Translation: 
With smiling face he entertains each virtuous guest, 
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.
Explanation: 
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
குறள் 85: 
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.
கலைஞர் உரை: 
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.
மு.வ உரை:
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.
பரிமேலழகர் உரை:
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.
Translation: 
Who first regales his guest, and then himself supplies, 
O'er all his fields, unsown, shall plenteous harvests rise.
Explanation: 
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?.
குறள் 86: 
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.
கலைஞர் உரை: 
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
மு.வ உரை:
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.
பரிமேலழகர் உரை:
செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.
Translation: 
The guest arrived he tends, the coming guest expects to see; 
To those in heavenly homes that dwell a welcome guest is he.
Explanation: 
He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.
குறள் 87: 
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.
கலைஞர் உரை: 
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
மு.வ உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.
பரிமேலழகர் உரை:
வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.
Translation: 
To reckon up the fruit of kindly deeds were all in vain; 
Their worth is as the worth of guests you entertain.
Explanation: 
The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.
குறள் 88: 
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.
கலைஞர் உரை: 
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
மு.வ உரை:
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.
பரிமேலழகர் உரை:
பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.).
மணக்குடவர் உரை:
விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.
Translation: 
With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry, 
Who cherish not their guests, nor kindly help supply.
Explanation: 
Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."
குறள் 89: 
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு.
கலைஞர் உரை: 
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
மு.வ உரை:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
பரிமேலழகர் உரை:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.
Translation: 
To turn from guests is penury, though worldly goods abound; 
'Tis senseless folly, only with the senseless found.
Explanation: 
That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.
குறள் 90: 
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
நோக்கக் குநழ்யும் விருந்து.
கலைஞர் உரை: 
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
மு.வ உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
சாலமன் பாப்பையா உரை:
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.
பரிமேலழகர் உரை:
அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும் - விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். (அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர். இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.
Translation: 
The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale; 
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.
Explanation: 
As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.