Monday, February 1, 2016

கடவுளின் அளவுகோல்

வையகத்தில் பிறந்தாலே வயோதீகம் மரணம்
உறுதி என்ற நிலையிலும்
மனிதன் மரணத்தை வெல்வோம் என்ற நிலையில்தான் வாழ்கிறான்.
ஆணவமற்ற ஆன்றோரைப் பின்பற்றி வாழ்வோனும்
அவர்  மறைவுக்குப்பின்
அவர் பெயரால்  அவரின் பெயருக்கு
களங்கம் உண்டாகும்படி  செல்வம்
சேர்ப்பதே குறியாக உள்ளான்
பொருள்பொருந்திய வாழ்க்கையை
பொருளாதாரமுள்ள வாழ்க்கையாக
மாற்ற முனைகிறான் .
அவனியில் வாழ  பொருளே ஆதாரம்  என்ற நிலைக்கு ஆன்மீகம்
என்றால் ஆன்மீக நம்பிக்கை  நிலைக்குமா ?

No comments: