Saturday, October 20, 2012

குற்றங்கள் . நடந்த வண்ணமாக உள்ளன. அதை பாரத மக்கள் மதியால் வெல்வார்களா//??

விதி  என்பது வலியது என்றனர்.---சிலர்
விதியை  வெல்லலாம் என்றனர்.

மதி எல்லாம் அதிக பட்சம் குற்றங்கள் 
புரியவே?
மதிமயக்கும் விதி என்பர்.
அதனால் தான்  ஊழல் புரிந்தோர்,
ஊழலின் எல்லைக்கே சென்று--இன்று 
செய்தித் தாளில் நீ ஊழல் -நான் ஊழல்,
அவன் ஊழல்,ஊழல் ஊழல் என்று சொல்பவனும் 
ஊழலுக்குத் துணை போவோர் சிலரின் 
ஊழலை மறைப்பதாகக்  குற்றச்சாட்டு.
குற்றம்புரிந்தவன்  வாழ்க்கையில்  
நிம்மதி  எது?
ஆனால்விதி மதியை மயக்கி 
மேலும்மேலும் குற்றங்கள் .
நடந்த  வண்ணமாக உள்ளன.
அதை பாரத மக்கள் மதியால் வெல்வார்களா//??

அல்லது  விதியென  துன்பங்களை  அனுபவிப்பார்களா/
அப்படித்தானே அயலார் ஆட்சியையும்
இப்பொழுது  மன்மொஹன்சிங்கை ஆட்டிவைக்கும்
தலைவியையும் ஏற்று வாக்களிக்கின்றனர்.

No comments: