Saturday, March 18, 2023

துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-तुलसी रामायण-सुंदरकांड.

 துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-
வால்மீகி எழுதிய இராமயணம் பாரதத்தின் அனைத்து மொழிகளிலும்
 பேச்சு வழக்கில் உள்ள மொழிகளிலும்
 உலகத்தில் உள்ள மொழிகளிலும்
மொழி பெயர்க்கப்பட்டு
மக்களை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வால்மீகி இராமாயணத்தை விட
துளசி இராமாயணம் வட பாரதத்தில் 
 ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறது.
இராமநவமியை முன்னிட்டு துளசி இராமாயணத்தின்
 சுந்தரகாண்டத்தின் தமிழ் பொருளுரை.


ஸ்ரீ கணேசா போற்றி.
ஓம் முருகா போற்றி 
ஓம்  சிவனே போற்றி.
ஓம் துர்கையே போற்றி.
ஓம் ராமரே போற்றி.
ஓம் சீதையே போற்றி.
ஓம் ஹனுமனே போற்றி

-------------------------------------------------------

சுந்தர காண்டம் 

பகவான் இராமர்  அமைதியானவர் .
அழிவில்லாதவர் .
நிலையானவர் .
முக்தியளிப்பவர்.
 சாந்தி அளிப்பவர் .
ஆசிகள் வழங்குபவர்.
படைக்கும் கடவுள்
பிரம்மனால் வணங்கப்பட்டவர்.
அழிக்கும்  கடவுள்
சிவனால் வணங்கப்பட்டவர்.
பூமியைத் தாங்கும்
ஆதிசேஷனால் வணங்கப்பட்டவர் .
வேதங்களால் அறி்யப்பட்டவர்.
உலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர்.
அனைத்து இறைவனைவிட உயர்ந்தவர்.
மாயையால் மனிதனாக காட்சியளிக்கும் ஹரி.
அனைத்து பாவங்களையும் போக்குபவர்.
கருணையின் சுரங்கம்.
அரசர்களில்  தலைசிறந்தவர்.
ரகுகுலத்திலகம்.
ராமர் என்று அனைவராலும்
அழைக்கப்படுகின்ற
வையக இறைவனை வணங்குகிறேன்.
என் மனதில்
என் அந்தராத்மாவில்
 எவ்வித விருப்பமும் கிடையாது.
எனக்கு முழுமையான பக்தியை அளியுங்கள்.
என் மனதில் காமம் போன்ற
 குற்றமில்லாமல் இருக்க அனுக்ரஹம் செய்யுங்கள்.

ராமரே ! ஒப்பிடமுடியாத பலம் பெற்றவரே! 
தங்கமலை போன்று
மின்னும் ஒளிரும் உடல் பெற்றவரே ! 
அரக்கர்கள் என்ற வனத்திற்கு
காட்டுத்தீ  போன்றவரே!
ஞானிகளின் தலைவரே!
அனைத்து நற்குணங்களையும் பெற்றவரே ! 
உங்களை வணங்குகிறேன்.

வானரங்களின் தலைவரான ராமரின்
ப்ரிய பக்தனாக விளங்கும்
ஸ்ரீ ஹனுமானை வணங்குகிறேன்

ஜாமவந்தனின் அழகான அன்பான,
பணிவான வந்தனங்கள்,வேண்டுகோள்கள்
ஆஞ்சநேயருக்கு மிகவும்  பிடித்திருந்தன.
ஹனுமான் அனைவருக்கும் தைரியம் அளித்து சொன்னார்----
நான் சீதையை கண்டுபிடித்து திரும்பும் வரை
மனத்துயரத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
கட்டாயமாக சீதையைக் கண்டுபிடித்து திரும்பிவருவேன்.
எனது மனம் மிகவும் மகிழ்கிறது.
என்று கூறிக்கொண்டே
ஸ்ரீ இராமரை மனதில் அமர்த்தி 
அனைவரையும் வணங்கி
சீதையைத் தேடி புறப்பட்டார்.

இராமர் கடற்கரையை அடைந்தார்.
அங்கு ஒரு அழகான மலை இருந்தது.
அதன் மேல் மகிழ்ச்சியாக ஏறினார்.
இராமரை மனதில் நினைத்துக் கொண்டே
துள்ளிக் குதித்தார்.
அவர் குதித்த வேகத்தில் மலையானது
 பாதாளத்திற்குள் அமுங்கிவிட்டது.
இராமரின் குறிதப்பாத அம்பு போல் 
ஹனுமான் முன்னே சென்றார்.

சமுத்திரமானது ஸ்ரீஹனுமானை
இராமரின் தூதர் என்று அறிந்து 
மைனாக் மலையிடம்
ஸ்ரீஹனுமானுக்கு  ஓய்வெடுக்க இடம் கொடு என்று கூறியது.



No comments: