Tuesday, June 30, 2015

கும்பிடு.எதிர்கும்பிடு போடுவதில்

  காலை  வணக்கம் /மாலை வணக்கம் /இரவு வணக்கம் 

இந்த  வணக்கம்  நேரம் சேர்ப்பது யார் பழக்கம்.

வணக்கம்  இருகரம் கூப்பி சொல்வதா?

ஒருகரம் எடுத்து அடிப்பதை தடுப்பது போல் சொல்வதா?

நம்மில் பயம் இல்லை ,இருகரம் கூப்பியே  

வணக்கம் சொல்வோம்.
அப்படித்தானே கொன்றான் கோட்சே .

வணக்கம் சொல்பவனிடமும்  எச்சரிக்கை தேவை.
இந்திராவைக் கொன்றவன் பாதுகாவலன் 

அவன் வணக்கம் சொல்லவில்லை .
கூழைக்கும்பிடு போடுதல் என்பார்கள் 

கொலைக் கும்பிடும் உண்டு .
கோழை  கும்பிடும் உண்டு .
சுயநலக் கும்பிடும் உண்டு .
சூழ்ச்ச்சிக்கும்பிடும்  உண்டு.
மரியாதைக் கும்பிடும் உண்டு.
சாமியைக் கும்பிடுவதும் உண்டு.
எதற்கும் எச்சரிக்கை வேண்டும் 
கும்பிடு.எதிர்கும்பிடு போடுவதில் 

No comments: