Saturday, April 21, 2018

ரஹீம் ஹிந்தி கவிஞரின் ஈரடி



ஜோ ரஹீம்  உத்தம் பிரகிருதி ,கா கரி சகத் குசங் .,

சந்தன்  விஷ்  வ்யாபத் நஹீன் ,லபடே ரஹத் புஜங் .


             நல்லவர்களின்  உத்தமர்களின் இயற்கை குணம் ,

             தீயவர்களின் சேர்க்கையால்  தீய குணமாக மாறாது.

                 சந்தன  மரத்தில் பாம்பு சுற்றியிருந்தாலும் ,
               சந்தன மரத்திற்கு பாம்பின் விஷம் ஏறாது.


இயற்கையாகவே உத்தம குணம் உள்ளவர்கள்
தீயவர்களுடன்  சேர்ந்தாலும் நல்லவர்களாகவே  இருப்பார்கள் என்பதை ரஹீம்  சந்தன மரம் பாம்பின் சேர்க்கையோடு  ஒப்பிட்டுக் கூறுகிறார்.
சந்தனமரம் வாசமும் குளிர்ச்சியும் இயற்கையாகவே  இருக்கும்.
பாம்பிற்கு இயற்கையான குணம் விஷத்தன்மை .
இதனால் சந்தனமரம் விஷமாக மாறாது. தன இயல்பான நற்குணங்கள் எத்தகைய தீயவர்கள் சேர்ந்தாலும் மாறாது.



௨.  ரஹீமன் பாணி ராக்கியே ,பினு  பாணி சப் ஸுன் .
பாணி கயே ( gaye)  ந  ஊபரே( oobhare)மோதி ,மானுஷ்  சூன்.

   ரஹீம்  சொல்கிறார் :-
  தண்ணீரை,    ஒளியை , (பிரகாசத்தை )கௌரவ த்தை க் காப்பாற்றுங்கள் .

தண்ணீர்   இல்லை என்றால்  முத்து உருவாகாது.

கௌரவம் இல்லை என்றால் மனிதனுக்கு மதிப்பில்லை.

தண்ணீரின்றி மாவு பயன் படாது.

முத்து  பளபள  வென்று மின்னி ஒளிரவேண்டும்.

பாணி =  தண்ணீர் ; பளபளப்பு , மதிப்பு- மரியாதை

பாணி ராக்கியே  ==கௌரவம் ,பளபளப்பு , தண்ணீர்  காப்பாற்றுங்கள் , சேமியுங்கள் .


௩.
 ரஹிமன்  தேக்கீ  badan  கோ ,laghu ந  தீஜியே டாரி.
ஜஹான்  காம்  ஆவே சூயி ,கஹா கரை தரவாரி .


  பெரியவர்களைக்  கண்டு ,
சிறியவர்களை விட்டு  விடாதீர்கள்

ஊசி   சிறியது , வாள்  பெரியது.

ஊசி செய்யும் வேலையை கத்தி செய்யாது .

கத்தி யின் வேலையை ஊசி  செய்யாது.

  மனிதர்கள் வாழ  ஊசியும்  வேண்டும் , கத்தியும் வேண்டும்.









No comments: