Sunday, April 22, 2018

पुरानानूट्रूप पाडल--புறநானூறு பாடல்


புறநானூறு பாடல் 5 – நாட்டு மக்களை அன்புடன் காக்க !

पुरानानूरू गीत -५  देश वासियों को प्रेम से रक्षा करना
कवि :--नरीवेरुउत   तलैयार
नरेश  का  नाम :---चेरमान करुऊर  एरिय  ऑलवाट कोप्पेरुन्चेरल  इरुम्पोरै

பாடியவர் – நரிவெரூஉத் தலையார்

பாடப்பெற்றவர் – சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை


பாடல்:
எருமை அன்ன கருங் கல் இடைதோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை ! நீயோ, பெரும !
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி !
அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே.

एरुमै  अन्न  करुन्कल इडैतोरू ,
आ निन परक्कुम  यानीय, मुन्पिन,
कानक  नाडनै! नीयो ,पेरुम!
नी ओर आकलिन ,निन ओंरू  मोलिवल
अरुलुम अन्बुम  नीक्की  नीँगा,
निरयं  कोल्पवारोडू  ओंरातु ,कावल ,
कुलवि कोल्पवरिन  ,ओम्बुमती !
अलितो  ताने ; अतु  पेरल  अरुन्कुरैत्ते .

सरल  भावार्थ :-
 तुम उस जंगल के मालिक  हो ,
जहां भैंस  सा काले पत्थर के  बीच गायें ,हाथी
चल फिर रहे  हैं ,
तुम बड़े हो,माफ  करो !
गलत मत समझो !
दया-कृपा रहित जो  लोग हैं ,
   वे नरक को जायेंगे .
उनसे मत संपर्क रखो ;
जैसे माँ  बच्चे की सेवा  करती ,
वैसे  ही देश  की रक्षा करो .
राजपद  मिलना दुर्लभ है ,
वह तो साधारण पद नहीं |
वह  सरल  भी नहीं है|

எளிய உரை:
எருமைகள் போல கருங்கற்கள்
இடையே பசுக்கூட்டமும், யானைகளும்
உலவும் காட்டிற்குச் சொந்தமானவனே !
நீ பெரியவன், உனக்கு ஒன்று சொல்வேன்
(தப்பாக எடுத்துக்கொள்ளாதே !)
அருளும் அன்பும் இல்லாதவர்,
நரகத்துக்குச் செல்வர்,
அவர்களோடு சேராது, குழந்தையைக்
காப்பாற்றும் தாயைப் போல நாட்டைக் காப்பாற்று !
அரச பதவி கிடைப்பது
அத்தனை எளிதல்ல.

No comments: