Thursday, September 30, 2021

காதல் மகிழ்ச்சி

 சே.அனந்தகிருஷ்ணன்.

வணக்கம்.

 மனத்திற்கு மகிழ்ச்சி டையும் மன நிறைவையும் தருவது நட்பா? காதலா?

+++++++++++++39-1+2021

முன்னுரை 


மனமகிழ்ச்சி என்பது தெய்வீகம்.

நட்பு என்பது கர்ணன் போன்று ஆயிரத்தில் ஒருவர். காதல் வராத மனிதப் பிறவி இருக்காதே.

மிருகப் பிறவி இருங்காது.

மலர் வண்டு இருக்காது.

புழு பூச்சிகள்  இருக்காதே.


லௌகீகம் நட்பு. அலௌகீகம் காதல். ஆண்டாளின் காதல், சீதையின் காதல், வள்ளி முருகன் காதல், ராதா கிருஷ்ணன் காதல்.

 காதல்  தெய்வீகமானது. புனித மானது. 

 துவக்கப்பள்ளி நட்பு , உயர்நிலைப்பள்ளி நட்பு கல்லூரி 

பணியாற்றும் அலுவலகத் தோழர் நட்பு,   உயிர்த் தோழர் , தோழரே என்ற தொழிற்சங்க நட்பு .

தோழர்களே  என்ற பொது அழைப்பு.


   இந்த நட்புமாறு படுகிறது. காதல் நிலையான மகிழ்ச்சி தருவது.

 மனதுடன் ஒத்த மகிழ்ச்சி.

 உடலுடன் பிணைந்த மகிழ்ச்சி.

 கண்ணுடன் கண் கலந்த காதல்.

 பணத்தின் மீது காதல் 

 நகையின் மீது காதல்,

உடலோடு காதல் 

  ஆபத்தில் உதவுவது நட்பு.

 காதல் இணை இன்ப துன்பத்தில்

 இணைந்தே இருப்பது.

 கூடா நட்பு உண்டு.

 கூடா காதல் இல்லை.

 காதல் என்பதே கவித்துவம்.

 நட்பால் கவிதையை விட 

 காதலால் கவிதை அதிகம்.

 இடுக்கண் களைவது நட்பு .

 இன்பம் தருவதே காதல்.

 காதாலால் கசிந்து யுருகி கண்ணீர் மழ்கி இது தெய்வீகக் காதல். 

சுகமான காதல்   இயற்கை உணர்வு.

 நட்பு இயற்கை அல்ல. நட்பு க் கதைகள் குறைவு.

  காதல் கதைகள் அதிகம்.

 இறையின்பமே காதல்.

 பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன்  நட்பு இறுதிவரை  இணையவில்லை.

  காதல் தோல்வி. காதல் தற்கொலை. ஆனால் நட்பு தேல்வி இல்லை தற்கொலை இல்லை.

 இப்படி பல விதத்தில் பார்த்தாலும் 

 காதலே மனமகிழ்ச்சி  உடல் மகிழ்ச்சி தருவது.

 மீராபாய் தன் பாடலில் இறைவன் மீது கொண்ட காதலால் வெட்கத்தை மறந்தேன். உறவினர்களின் திட்டுதல்  அவமானம் செய்தல் அனைத்தையும் பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

என்கிறாள்.

  காதல் காலத்தில் தாய் தந்தை தெய்வம் அனைத்தையும் மறந்து 

காதலனுடன் ஓடும் கதைகள் தான் இன்றைய திரைப்படம்.

    முடிவுரை : காதல் மிகவும் புனிதமானது. காதல் காதல் காதல் காதல் இல்லையேல் சாதல் இது 

தான் மஹாகவி பாடல். ஆதலால் காதலே நிரந்தர மகிழ்ச்சி.

காதல் வந்ததும் நட்பு மறுக்கப்படாமல். காதல் அல்ல.


.

   சே.அனந்தகிருஷ்ணன்.

No comments: