Thursday, April 11, 2013

விஜய வருடம் வாழ்த்துக்கள்

விஜய  வருடம்  வாழ்த்துக்கள் 

விஜய  வருடம் ,பெயரே 
வெற்றிவருடம்;
தரணியில் சுபிக்ஷம் ,
தண்ணீர் தட்டுப்பாடு 
இருக்காது என்று 
இவ்வருட பலனில்
 கூறப்பட்டுள்ளதே,
ஒருமகிழ்ச்சிதான்.

இந்த ஆண்டு பிறப்பில்,
மனித நேயம்  வளரவும்,
கடமையுணர்வு ஓங்கவும்,
கையூட்டுகள் இல்லா ,
அரசு அலுவகங்கள்  இயங்கவும்,
அனைவருக்கும் ,அனைத்து 
நலன்கள் கிட்டவும்,
ஆனந்தம் பொங்கவும்,
இல்லாமை அகலவும்,
ஈகையாளர்கள்- பெருகவும்,
உள்ளத்தில் நேர்மை  பெருகவும்,
ஊரும்நாடும் செழிக்கவும் ,
எண்ணங்களில் உயர்வும் 
ஏற்றமடையும்   வாழ்க்கையும்,
ஐக்ய உணர்வும் ,
ஒப்பில்லா புகழும் ,
ஓங்கி உலகு புகழ் பாரதமும்,
களங்கமில்லா  பக்தியும்,
கலக்க மில்லா இல்வாழ்க்கையும்,
சலனமில்லா மனமும் 
ஞானமயமான  உயர் சிந்தனைகளும் 
அனைவரும் அகிலமும் உய்ய,
தென்னாட்டுடைய ,சிவபெருமானும் ,
எந்நாட்டிற்கும் இறைவனுமான ,
உலகநாதனை வேண்டி  வணங்கி,
உற்றாருக்கும்,உறவினருக்கும்,
நண்பர்களுக்கும்  எனது இனிய 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1 comment:

Ranjani Narayanan said...

மிகச் சிறப்பான வார்த்தைகளால் புது வருட வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறீர்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.