Wednesday, December 17, 2014

இரக்கமில்லா படுகொலை,

இளந்தளிர் ,எதிர்காலக் கனவுகள் ,

பெற்றோர்களின் வேதனை , இதில் 

ஒரு பழிக்குப் பலி என்ற கூவல்.
ஐயம் எழுந்து விட்டது 
ஞாலத்தில் ,அல்லா உள்ளாரா ?
ஆண்டவன் உள்ளாரா?
இறைவன் உள்ளாரா ,
ஈசன் உள்ளாரா?
சீவிமுடித்து சீருடை தரித்து 
சிங்காரம் பண்ணி சிர்த்து சென்ற சிறுமிகள்,
சவமாகி சவப்பெட்டியில் வரும்  கொடுமை,
இது தானா  அரசியல்?
மன்னர்காலத்தில் 
மன்னர் காதலிக்காக 
மடிந்தனர் வீரர்.
மதுரை அழிந்தது கண்ணகிக்காக.
ஸ்ரீலங்கா எரிந்தது சீதைக்காக.
கோரியும் கஜினியும் 
நாதிர்சாவும் வரலாற்றில் 
இன்று நேரடிக்காட்சி 
நெஞ்சம் நடுங்குகிறது. பாவிகள் 
அப்பாவி பாபாக்களை அழித்த
அரக்கர்கள். கிடைத்தது என்ன ?
இடுகாடு.
வையகம் வாழ்க!சர்வே ஜனா சுக்கி நோபவந்து!
அஹிம்சா பரமோ தர்மஹ. சத்ய மேவ ஜெயதே
இதுதான் நமது தாய் மதத் தத்துவம்.
சிந்த்திப்பீர்!மனம் மாறுவீர்.! 

No comments: