Wednesday, November 23, 2016

கபீரின் சிந்தனைகள் -மூன்று

௧௧.
 கபீர்  சொல்கிறார் :--

சத்குரு ஆனவர்   மனதில்
 பற்றி  எரியும்  காமம் , கோபம்
போன்ற  மன மாற்றங்களை
எரித்துவிட்டார்.
எனக்கு சமநோக்கு  பார்வையை
வழங்கிவிட்டார்.
இப்பொழுது  குரு அருளால்
மன ஒருமைப்பாடு ஏற்பட்டு
நோக்குமிடமெல்லாம்
ஒரே இறைவனைத்தான்
தர்சிக்கிறேன்.
**************************
௧௨.

சம  நோக்கு  என்பது  மனதில்
 எல்லா அறங்களையும்
மதங்களையும்  சமமாக
உணர்வதாகும்.
எல்லா உயிரினங்களின்
 ஆத்மாக்களையும்
ஒன்றுபோல் பார்ப்பது ,
அறிவதும்  தெளிவதுமாகும்.
**************************
௧௩
 இறைவனை மனிதன்  துன்புறும்போது
அதிகம்  வணங்கி வேண்டுகிறான்.
சுகத்திலும் இன்பத்திலும்
யாரும்  வணங்கி வேண்டுவதில்லை.
சுகத்திலும்  இனத்திலும் நினைத்தால்
துன்பமே  வராது.
இறைவனை சதா சர்வகாலமும்
ஜபிக்கவேண்டும்.
**************************
௧௪.
சுகத்தில்  ஜபிக்காமல்
துன்பத்தில் மட்டும் ஜெபிக்கும்
பக்தனின்  பிரார்த்தனையை
கடவுள்  ஏற்கமாட்டார்.
**********************
௧௫
கடவுளை  பெண்ணாசை உள்ளவன் போல்
இரவும் பகலும்  நினைத்து  அவன்
நாமத்தை  ஜபிக்கவேண்டும்.
******************
௧௬.
மான்  இசையில் மயங்கி தன்னை
மறந்து  தன் மயமாவதுபோல்
பக்தன்  பக்தியில்
தன்னையே மறந்து
ஈடுபடவேண்டும் .
மான்  இசையின்  நாதத்தில் மயங்கி
உயிரையே விட்டுவிடுகிறது.
அப்படி மெய்மறந்து
 வணங்குவதே
பிரார்த்தனையாகும்.
*************************
௧௭.
இறைவனை தியானம்
  செய்யும்போது ,
மனதில்  அவன் சிந்தனை
மட்டும் இருக்கவேண்டும்.
வேறு சிந்தனையோ,
வேறு பேச்சோ  இருக்கக் கூடாது.
ஐம்புலன்களின் சஞ்சலங்களை  அடக்கி
உள் கதவை திறந்து
  ஆத்மாவை மட்டுமே
 உணரவேண்டும்.
௧௮.
 கையில் ஜபமாலை சுழற்றி ,
ஒரு யுகம்  கழிந்துவிட்டது.
மனதில் உள்ள சஞ்சலங்கள்
தீய  எண்ணங்கள் நீங்கவில்லை.
எப்படி  இறைவனருள்  கிட்டும்.
கையில்  உள்ள ஜபமாலை கீழே
போட்டு விடு.
மனம் என்ற  மாலையை சுற்று.
மனதை ஒரு நிலைப்படுத்து.
மற்றவர்களுக்காக  மாலை சுற்றி காட்டும்
பொய்யான காட்சியை விட்டு
மனதிற்குள் இறைவனை வைத்து தியானம்  செய்.
௧௯.
மாலை  என்பதுதான் மனம்.
கையிலுள்ள  ஜபமாலை
வெறும்  வெளி வேடம்.
பெண்களின்  கழுத்திலும்
மாலை இருப்பதைப் பார்.
மனம்  என்ற மாலையில் இறைவனை
இடைவிடாமல்
ஜபிக்கவேண்டும்

************************
௨௦.
நீ  வைத்துள்ள   ஜபமாலையில்
 முடுச்சுகள் உள்ளன.
அது  மரத்தால்  செய்த  மாலை.
ஆத்மாவின்  நலத்திற்கு
பிராணாயாமம் தான்  சிறந்தது.
பிராணாயாமம் என்ற  மாலையில்
முடுச்சுக்கள்  தடைகள்  இல்லை.
எவ்வித  கலைப்படமும் இல்லை.
ஒவ்வொரு  மூச்சிலும்
 இறைவனின் நாம
ஸ்மரணை உள்ளது.
அதுதான்  உண்மையான  மாலை.
**************************

No comments: