Friday, November 25, 2016

கபீரின் சிந்தனைகள் --ஐந்து

௪௧.
கபீர்   இறைவனிடம்  வேண்டுகிறார்:--

கடவுளே ! எனக்கு  என்  குடும்பத்தை
 சமாளிக்கின்ற  அளவிற்கு
கொடுங்கள் . அது  போதும்.
நானும்  பசியோடு  இருக்கக் கூடாது ,
என்  வீட்டிற்கு வரும்  சாதுக்களும் ,
மகான்களும்   பசியோடு போகக் கூடாது.

௪௨.
உடல்  மணமுள்ள  மலர்  போன்றது.
மனது  அதில்  ரீங்காரமிடுகின்ற
 வண்டு போன்றது.
பொருள் அதனுடைய  விசித்திர  மணம்.
அந்த மலர்  என்ற உடலில்
இறைநாமம்  என்ற  தண்ணீரை பாய்ச்சினால்
அதில்  நம்பிக்கை  என்ற  பழம் ஏற்படும்.
௪௩.
இறைவனே!  உன்னை  தியானிப்பவர்களுக்கு,
 நீ  கிடைக்கவில்லை. தியானி க்காதவர்களுக்கும்
நீ  கிடைப்பதில்லை.
சிரத்தையுடன்  உன்னை
 தியானிப்பவர்களுடனேயே
நீ   இருக்கிறாய்.

௪௪.
உன்  இதயத்தில்  ஆத்ம  ஞானம்
  என்ற  கண்ணாடி இருக்கிறது.
ஆனால் மனதின் விகார எண்ணங்களால்,
பரமாத்மாவை பார்க்க முடியவில்லை. 
கோபம்.காமம்  போன்ற  விகார  எண்ணங்கள்
போக்கிவிட்டால், உன் மனம்  இறைவனைப்பார்க்க  முடியும் .
இறவன் உன்  இதயத்தில் அமர்ந்துவிடுவார்.

௪௫.

கபீர்  சொல்கிறார் ,
நான்  எல்லா சாஸ்திரங்களையும்
படிக்கவும்  மட்டுமில்லை ,
அவைகளை கற்று
 மனப்பாடமும்
செய்தேன்.
இருந்தாலும்  மனதில்
இருந்து சந்தேகம் என்ற    முள்
குத்த ஆரம்பித்தது.
நான்  இப்பொழுது எல்லா
துன்பங்களின்
மூலக் காரணங்களையும்
யாரிடம் சொல்லுவேன்.

௪௬.
ஜீவாத்மா பிரம்மாவைத்
தேடிச்  செல்லும் போது
நடுவில்  மாயை  வந்து விட்டது.
அதனால்  இறைவன்  கிடைக்கவில்லை.
இதை  கபீர்  சொல்கிறார்-
எறும்பு

ஜீவாத்மா பிரம்மா  என்ற அரிசியை
 எடுத்துச் சென்றது,
நடுவில் மாயை என்ற  பருப்பு பார்த்ததும்
அரிசியை  விட்டுவிட்டது.
இறுதியில்  இரண்டும்  கிட்டவில்லை.
எறும்பால்  இரண்டையும் எடுக்கமுடியாது.
நாம்  இறைவனை நேசித்தால்
இறைவனை  மட்டும்   தியானிக்கவேண்டும்.
௪௭.
கபீர்தாசரே,
எனக்கு  இறைவனின் பெயர்
  கசப்பாக இருக்கிறது.
ஆனால் பணமும்  சொத்தும்
இனிமையாக  உள்ளது.
இதை இரண்டும்  பெறவேண்டும்
என்ற  மோகத்தில்
இரண்டுமே  கிடைக்காமல் மறைந்துவிட்டது.
இந்த  மனப்போராட்டத்தில்
மாயையும்  கிட்டவில்லை.
இறைவனும்  கிட்டவில்லை.

No comments: