Saturday, November 12, 2016

கபீரின் சிந்தனைகள். onru -1

கபீர் -

திவ்யானுபவ்==கடவுளுணர்வு /இறையுணர்வு.

         இறை  உணர்வு -ஆத்மானுபூதி   பற்றி ,

      என்னிடம்   கேட்டால்  ,எப்படி  விளக்குவேன்?

     ஊமை   வெல்லத்தின் ருசி அறிந்ததுபோல் ,

    எப்படி  அவன் வாயால்  பகர்வான்?


  அதாவது  இறைவனின்  அநுபூதி  உணர்ந்தவர்கள்

 அதன் ருசியை அறிய முடியுமே  தவிர,
அந்த  பேரானந்தத்தை  விளக்க  முடியாது.

௨.

ஊமையின்  சங்கேத  மொழியை ஊமையால்  தான்
அறிய முடியும்.-அவ்வாறே
ஆத்மா  ஞானியின்  பேரானந்தத்தை , 

ஆத்மா  ஞானியால்  தான்  அறியமுடியும் .

   கற்றாரை கற்றாரே  காமுறுவர்  என்பதுபோல்

இறைவனை  உணர்ந்தவர்களை
இறைவனை  உணர்ந்தவர்களே  அறியமுடியும்.


௩.     வெள்ளைத்தாளில்    தன் ஞானத்தை  எழுதுபவன் ,

            நகல்  எடுப்பவன் .  ஞானம்  பெறாததால் உலகில்

          நடைமுறை   அறியாமல்  வழி  தெரியாமல்  சுற்றுபவன்.
         ஆத்ம உணர்வு ,ஆத்ம நோக்கு  பெற்றவர்கள் ,(சுய்நோக்கு சிந்தனை )
         தங்கள் ஞானம்  பற்றி  தாங்கள்   எப்படி எழுதுவார்கள்?
          ஞானம்  பெற்றவர்களுக்கு  அங்கிங்கு எனாதபடி எங்கும்
          இறைவனே  தென்படுவான்.

         ௪.   
              எழுதுவதால்  எந்த  ஞானமும்  இல்லை.

            நேரடியாக  பார்க்கின்ற   ஞானம்  தான் ஞானம் .
             மணமகளும்  மணமகனும் கலந்து விட்டால்

           மாப்பிள்ளை ஊர்வலம்  கலை  இழந்துவிடும் .

  விளக்கம்:---
     
       சுய  நோக்கு  மூலம்  பெற்ற   ஞானம் ,
       சுய   உணர்வால்   பெற்ற  ஞானம்  
       எழுதி உணர  வைக்க முடியாது.

       சுயாநுபூதி  பெற்ற  பிறகு  ஜீவாத்மா  ,பரமாத்மா

      இரண்டும்  கலந்து விட்டால்  பெரும்  ஞானம்    வந்துவிட்டால் ,

      உலகியல்  பற்று ஏற்படுத்தும்  ஐந்து இயற்பியல்  தத்துவங்கள்

        ஒளி  இழந்து  விடும்.  உடல்  சம்பந்தமான/  உலகியல்  பற்றுகள் 

     ஏற்பாடாத நிலை  வந்துவிடும்.

௫    தன்னைத்தான்  பெரிய  முற்றிலும் அறிந்த  
       ஞாநியாகக் கருதுபவன் ,
        ஆத்ம  ஞானம்   பெற்ற  பிறகும் ,
        தனக்குள் ஒரு  வெற்றிடத்தையே  உணர்வான்.
      ஞானம்  பெற்றவன் தன்னை
     அக்ஞாநியாகவே  உணர்ந்தால்
      முழு ஞானி ஆவான்.


௬.     ஒரு  நல்ல ஞானி அல்லது  சாது  ,
         
           ஒரு  முறம் போல் இருப்பான்.

      உபயோக மற்ற  விஷயங்களை    வெளியேற்றி ,

    நல்ல  சாறுள்ள  சத்துள்ள  விஷயங்களை   மட்டும்

   தன்னிடம்   வைத்துக்கொள்வான்.





               
       




     






No comments: