Wednesday, November 30, 2016

கபீரின் ஆன்மீக சிந்தனைகள்.

  1.

 உருவமற்ற  இறைவன் ஒரு மரம் .
தண்டிலிருந்து   வெளிவரும்  கிளைகள் , 
குற்ற மற்ற  பிரம்மா  மரத்தின்   கிளைகள்
இறைவனின் பெரிய  கிளைகள்.
பிரம்ம ,விஷ்ணு ,மகேஷ் மூவரும்
அதனுடைய  துணை கிளைகள்.
இந்த உலகம்
அதன்  இலைகள்  வடிவத்தில்  வெளிப்பட்டுள்ளது.

இலைகள்  பட்டுப்போவதுபோல்
புதிய  இலைகள்  தொன்றுவது  போல்
நிலையற்று  மாற்றம்  அடைவதுதான் வையகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

௨.

கபீர்  இஸ்லாமிய  கருத்துப்படி
கடவுள் ஒருவரே  என்றும்
மற்ற ஒருவர்  இல்லை  என்றும்
மற்ற  ஒரு  இறைவன்  உள்ளார்  என்றால்
உண்மையான  கடவுள்
 கோபமடைந்து விடுவார்.
ஹிந்து  வேதாந்தமும் இக்கருத்தை  ஏற்கிறது.
உருவமும்  அருவமுமாகி  இறைவன்  உள்ளார்.
கடவுள் விருப்பு-வெறுப்பற்றவர் என்றாலும்
கடவுள் அவதாரத்தில்
வெறுப்பு ,குரோதம்  போன்ற மனித  குணங்கள்
காணப்படுகின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

௩. 3
கபீரின் சிந்தனையில் ஞானத்தில் கடவுள்
உருவமற்றவர். அவருக்கு முகமில்லை.
நெற்றியில்லை .
அழகில்லை .
அழகில்லாமலும் இல்லை.
அவர்  ஒரு  விசித்திர
தத்துவ மாக  விளங்குகிறார்.
இறைவன்  பூவின்  மணம் போன்று
உருவமற்றவர் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

௪.4
இறைவன்  உடலற்ற நிலையில்
நினைவலைகளாக  இருக்கிறார்.
அவருக்கு   வடிவமோ
வண்ணமோ  கிடையாது.
அவர்  அகில உலகத்திலும் வியாபித்து இருக்கிறார்.
மனித  உடலில்  நினைவு /ஞாபகம்/ தியானம்
எல்லாமே  உருவமற்ற  சூக்ஷும அலைகள்.
அவ்வாறே  இறைவன் வண்ணமின்றி .
உருவமின்றி அகில உலகில்
 வியாபித்திருக்கிறார்.
உடலுள்ள ஜீவன்கள் , மனிதர்கள்
அதை  உணரமுடியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௫. 5
உருவமற்ற  கடவுளை  வழிபடும்  கபீர்
 சொல்கிறார்--
நான்கு  புஜங்களைக்கொண்ட
விஷ்ணுவை எல்லோரும் துதிக்கின்றனர்.
ஆனால்  கபீர் துதிக்கும் ஆண்டவனுக்கு
புஜங்கள்   எண்ணிக்கையில்  அடங்காதவை.
வேதங்களிலும்  இறைவனைத்
துதிக்கும்போது
ஆயிரம் புஜங்கள்  ஆயிரம்  கைகள்.
என்றே  சொல்கின்றனர்.
"சஹஸ் ர   ஷீர்ஷஹ  , சஹஷ்ரபாஹூ "
******************************************
௬.
கபீர்  சொல்கிறார் :--
என்னுடைய  கடவுள்
 பிறப்பு -இறப்பு இல்லாதவர்.
எல்லா அசையும்
அசையாதவற்றை
படைப்பவர்.
அந்த  காதலர்  கடவுளிடம்  நான்
என்னை அற்பணிக்கிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

௭. 7.
கடவுள் ஒருவர் என்றால்
அகிலஉலக த்தில்
வியாபித்திருக்கிறார்.
இருவர் என்றால் திட்டுவதாகும்.
கடவுள் ஒருவரே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

௮. 8
கடவுளுக்கு  எந்த உருவமும்  கிடையாது.
அவர் எந்த யோனியிலும் பிறக்கவில்லை.
இறைவன்  ஆகாயம்  போன்று
வியாபித்து இருக்கிறார்.
 உருவம்  உள்ளது  என்றால்
வரையறைக்கு  உட்பட்டவராகிவிடுவார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௯.9
கடவுள்  ஒருவரே.
 கடவுள் மற்றொருவர் இருக்கிறார்  என்றால்
அவன் வேறுபட்ட குலத்தவன் .
பதிவிரதை  போன்று பக்தனும்
பக்தியில் ஒரே இறைவனை
  ஆராதிக்கவேண்டும்.
ஹிந்து தர்மத்திலும்
ஹனுமான் உபாசகர், முருகதாசர், சக்தி உபாசகர் என்று
ஒரே இறைவழியில் செல்பவர்கள் உண்டு.
சிவபக்தர்கள் , சைவ  பக்தர்கள் ,
 வைஷ்ணவ  பக்தர்கள்  என்று உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
 பரப்ரம்மாவை  அடைய
 உருவ  ஆராதனை செய்யுங்கள்.
அதாவது குருவை வணங்கி
சேவை  செய்யுங்கள்.
நிர்குண அதாவது  உருவமற்ற
இறைவனின்  ஞானம் பெறுங்கள்.
ஆனால்  கபீர் உருவம் -உருவமற்ற  இறைவனைக்
கடந்த பரபிரம்மாவை தியானிக்கிறார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++




No comments: