Thursday, November 20, 2014

பழமொழி ---लोकोक्ति / कहावत /








பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.


(அசோக மரத்தின் நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக்கடவுளின் திருவடிகளைத் தொழுது பழைய பழமொழிகள் நானூறைத் தழுவி மூன்றுரை அரசர் இனிய பொருட்முறைகள் அமைந்த வெண்பாக்களாக்கி இந்நூற்பாட்டுக்களின் நான்கடியும் சுவை தோன்ற பாட்டமைத்தார்.
இறைவனை வணங்கி இப்பழமொழி நானூறும் பாடப்பெற்றன) அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்,


விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து,
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல,
பெரியதன் ஆவி பெரிது.

காமம்,வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களையும் அருமைகாக கெடுத்தலான்.குற்றமின்றி முற்றும் அறிந்த கடவுளின் திருவடிகளையே அகன்ற கடலால் சூழப்பெற்ற அகன்ற இடத்தினையுடைய பெரிய இவ்வுலகில் உரிமைப் பொருளைப் போலக் கருதி அறிந்தவர்களது உயர்வே பேருடம்பினையுடைய ஆவியைப் போன்று பெரிது

लोकोक्ति --



लोकोक्ति को    तमिल में   पलमोली   कहते हैं.  पल्मोली -पुरानी बात. "पळम "का मतलब 

फल . फल जैसा  स्वाद और उत्साह शिक्षा प्रद लोकोक्ति के आधार पर

  ४०० पद्यों को "मूरुरैयानार " नामक  जैन मुनि ने लिखा है.


१.


ईश्वर वंदना

  गणेश की प्रार्थना करके  जो 


अशोक पेड़ के नीचे विराजमान  हैं,

चार सौ लोकोक्ति के आधार पर  ये चार सौ 

चौपाई  लिखे गए हैं.




१.


जग  में  उनकी आत्मा है अपूर्व,

 जिनके मन में  केवल ईश्वर का ही

 ध्यान  हो ,ईश्वर जो काम ,क्रोध ,माया को 

समीप आने नहीं देता.

२.

பழமொழி நானூறு - பாடல் 2 முதல் 5 வரை


2. மேல்நிலை அடைதல்==
श्रेष्ठ व्यक्ति  बनना.

     மணல் மேடுகளிலே விளங்கும் அடும்பின் கொடிகளிலே, பூக்கள் மலிந்திருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே! மிகுதியான பழிச் செயல்களை ஒருவன் அதிகமாகச் செய்து விட்டால், மீண்டும் அந்தப் பழியைப் போக்கிக் கொள்ளத்தக்க வழிகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாதவன் மேல் நிலையடைதல் என்பது ஒரு போதும் நடவாததாகும். 'அகலினுள் உள்ள நீரிலே நீர் துளும்பக் குளித்துத் தூய்மை யாவேன்' என்பது போல, அது ஒரு போதும் நடக்க முடியாததேயாகும்.

மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல், - எக்கர்
அடும்பு அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே
துடும்பல் எறிந்து விடல்'.

     பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. 'அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்' என்பது பழமொழி.

        जिस समुद्र  तट पर के रेत में फैले hare-leaf की लताओं में  ,पतले फूल खिलते हैं , उस देश के नरेश!
  अधिक निंदनीय काम कोई करें तो उससे  बचने का मार्ग भी उसको ज्ञात होना चाहिए. ऐसे ज्ञान मालूम होना असंभव है.जैसे  अकाल में सूखे प्रदेश के जल में नहाकर साफ होना.



3. அறநெறியாளனுக்கு உபதேசம்--धार्मिक चिंतान्वालों को क्या उपदेश.

     மாறுபாடில்லாத செயல்களின் மூலமாகவே ஒருவன் பெரும்பொருள் பெற்றனன். அந்தப் பொருள் வந்து சேர்ந்த வகையும் அதற்கான முதலீடும் அப்படியே அறநெறிக்கு மாறுபாடில்லாதது. அங்ஙனமானால், 'பல திறப்பட்ட வகைகளால் எல்லாம் அறம் செய்வாயாக' என அவனிடம் சான்றோர் சினந்து கூறவேண்டாம். அப்படி அவர் கூறினாலும், அது சர்க்கரையாற் பாலின் சுவை மயக்கமடையும் நிலைமையினைப் போன்றதேயாகும்.

தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்
'மிக்க வகையால் அறஞ்செய்க!' எனவெகுடல்
'அக்காரம் பால்செருக்கும் ஆறு'.

     பாலில் சர்க்கரை சேர்த்ததும் இனிப்புச் சுவை கூடி, அது மேலும் விரும்பப்படுவது போல, அத்தகையோனைத் தரும காரியங்களிலே ஈடுபடத் தூண்டுவதனால் அவன் மேலும் சிறப்பே அடைவான். 'அக்காரம் பால் செருக்கும் ஆறு' என்பது பழமொழி.
  
धार्मिक  कर्मों के द्वारा कोई अत्यधिक धन 


कमायें तो  उसकी पूँजी भी धर्म कार्यों में ही 

लगेंगे. उनसे यह कहने की ज़रुरत नहीं  है कि

धर्म करो.दान करो.दूध  का शक्कर  जैसे स्वाद 

दूध  का  बढाता  है ,वैसे ही वह धर्म कार्य में 

लगाएगा तो  उसका यश  और भी बढेगा.


4. தளராதவன் செல்வனாவான் --दृढ़ व्यक्ति धनवान बनेगा.

     ஒருவனிடம் உள்ளது, அவனுடைய உள்ளூர்க்காரர்கள் மிகச் சிறிய அளவினதே என்று உணர்ந்ததான சிறு முதலே என்றாலும், அதனையும் இகழ்ந்து ஒதுக்காமல் பேணி, அவன் தன் தொழிலை முயற்சியுடன் வளர்க்க வேண்டும். விளங்கும் அணிகலன்களை அணிந்தவளே! பழைய ஊரிலேயுள்ள ஆரவார மிகுந்த கடைத் தெருவிலே மேய்ந்த பழைய கன்றே என்றாலும், அதுவும், பின் ஒரு காலத்திலே வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டல்லவா?

உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! - தள்ளாது
அழுங்கல் முதுபதி 'அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு'.

     கைமுதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியினால் அதனைப் பெரிதாக்கித், தன்னை இகழ்ந்த ஊரும் மெச்ச வாழலாம். முயற்சிதான் வேண்டும். 'அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு' என்பது பழமொழி.
e

       एक गरीब को अपने शहर  से दूर  रखना नहीं चाहिए;


 उसके  धंधे को वह मन लगाकर करना चाहिए.बाज़ार में 

भटक्नेवाला बछडा,बढ़कर बैल होने पर  उपयोगी होगा ही.

बाज़ार  का बछड़ा  बड़े होने पर  हल जोतने का काम आएगा. 





5. கொடியவன் பார்க்க மாட்டான்:--बुरा  बुरा न छोड़ेगा ,बुरा काम.

     பெரிய புன்னை மரத்திலுள்ள பூக்களில் நறுமணமானது, புன்மையான புலால் நாற்றத்தினைப் போக்கி விடுகின்ற கடற்றுறைகளை உடையவனே! சிறு பிராணிகளை அடித்துத் தின்னும்போது அவை வருந்தும். அது கண்டு, தின்னும் பெரிய விலங்குகள் அஞ்சி அவற்றைத் தின்னாது போவதில்லை. அது போலவே, எப்போதும் கொடிய செயல்களையே செய்பவரான கீழ்த்தரமானவர்கள், தம்மேல் பெரும் பழிச்சொற்கள் ஏறிக்கொண்டே போவதைக் கண்டாலுங் கூட, அதனைப் பொருட்படுத்தாது, அவற்றிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடுவார்கள்.

கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று 'அஞ்சாதே
தின்பது அழுவதன் கண்'.

     கீழ்மக்கள் கீழ்த்தரமான செயல்களைப் பழிக்கு அஞ்சியும் கூடக் கைவிட மாட்டார். 'அஞ்சாதே தின்பது அழுவதன் கண்' என்பது பழமொழி.
 पुन्नाग पेड़  के पुष्प, माँस का दुर्गन्ध मिटा देता है . ऐसे 

पेड़ों के राजा !सुनो ,नीच नीच ही रहेंगे.  जैसे छोटे जानवर ,
खूंख्वार जानवरों के शिकार देखकर दुखी होंगे ;फिर भी वे तो अपने शिकार न छोड़ेंगे. वैसे  ही निन्दित कर्म करनेवाले ,निन्दित  शब्दों को  सुनकर भी उसी काम में लगेंगे ही.
















No comments: